சண்டிகர்: பஞ்சாப்பில் இந்த மாதம் ராணுவம் மிகப்பெரிய போர் பயிற்சியை நடத்துகிறது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை சோதிக்கும் விதமாக பஞ்சாப்பில் ராணுவத்தின் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தளவாடங்கள் சோதித்து பார்க்கப்படும். எதிரிகள் மீது துல்லிய தாக்குதலை நடத்துவதற்கான ஒத்திகை இதில் முக்கிய அம்சமாக இருக்கும். இதில் ராணுவத்தின் அனைத்து படை பிரிவுகள், விமான படையும் பங்கேற்கும். ராணுவ மற்றும் விமான படை தளபதி முன்னிலையில் பயிற்சி நடைபெறும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பஞ்சாப்பில் பிரமாண்ட போர் பயிற்சி appeared first on Dinakaran.